உள்ளூர் செய்திகள்

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மனுக்கு தனலெஷ்மி அலங்காரம்

Published On 2023-01-06 06:35 GMT   |   Update On 2023-01-06 06:35 GMT
  • மண்ணச்சநல்லூர் பகவதி அம்மனுக்கு தனலெஷ்மி அலங்காரம் நடைபெற்றது
  • தனலஷ்மி அலங்காரத்தில் அம்மனை தரிசிப்பதால் கடன் பிரச்சினை தீரும், செல்வ வளம் பெருகும் என்பதால் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

மண்ணச்சநல்லூர்:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது பகவதி அம்மன் திருக்கோயில், மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் பெருந்திருவிழா கடந்த 31ம் தேதி தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாவான தனலெஷ்மிக்கு அலங்காரம் வெகு விமர்சையாக சமீபத்தில் நடைபெற்றது. இதில் ரூ.10 முதல் ரூ.2000 வரை அனைத்து மதிப்பிலான பணத்தையும் வைத்து உற்சவரை சுற்றி தோரணம் அமைக்கப்பட்டது. மேலும் தங்க நாணயங்களால் உற்சவருக்கு அலங்காரம் செய்து பக்தர்களை பிரமிக்கவும் வைத்திருந்தனர். இப்படி பல லட்ச ரூபாய் நோட்டுகளினால் பகவதி அம்மன் நேர்த்தியோடு அழகாக அமைக்கப்பட்டு தனலெஷ்மி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த தனலஷ்மி அலங்காரத்தில் அம்மனை தரிசிப்பதால் கடன் பிரச்சினை தீரும், செல்வ வளம் பெருகும் என்பதால் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News