உள்ளூர் செய்திகள்

ஆதித்யா எல்-1 விண்கலத்தால் சூரிய கிரகண நிகழ்வை காண முடியாது

Published On 2024-04-08 06:33 GMT   |   Update On 2024-04-08 07:02 GMT
  • 365 நாட்களும் 24 மணி நேரமும் தடையில்லாமல் பார்க்கும் வகையில் சரியான முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
  • கிரகணத்தின் காரணமாக செயற்கைகோளின் பார்வையை தடுக்காது என்பதை உறுதிப்படுத்த இந்திய விஞ்ஞானிகள் ஒரு இடத்தை தேர்ந்து எடுத்துள்ளனர்.

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் மட்டுமே முழு சூரிய கிரகணத்தை காண முடியும். இந்தியாவில் பார்க்க முடியாது. இந்தியாவின் ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

ஆதித்யா எல்-1 விண்கலத்தால் சூரிய கிரகண நிகழ்வை காண முடியாது. இது இஸ்ரோ அமைப்பின் தவறு இல்லை. 365 நாட்களும் 24 மணி நேரமும் தடையில்லாமல் பார்க்கும் வகையில் சரியான முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கிரகணத்தின் காரணமாக செயற்கைகோளின் பார்வையை தடுக்காது என்பதை உறுதிப்படுத்த இந்திய விஞ்ஞானிகள் ஒரு இடத்தை தேர்ந்து எடுத்துள்ளனர்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறும்போது, "ஆதித்யா எல்1 விண்கலம் சூரிய கிரகணத்தை பார்க்காது. சந்திரன் விண்கலத்தின் பின்னால் இருப்பதால் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 (எல் 1 புள்ளி) -இல் பூமியில் தெரியும் கிரகணத்துக்கு அந்த இடத்தில் அதிக முக்கியத்துவம் இல்லை" என்றார்.

Tags:    

Similar News