உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் இன்று காலை துணிகரம் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

Published On 2023-01-16 13:47 IST   |   Update On 2023-01-16 13:47:00 IST
  • தனது மகளுடன் விழுப்புரம் ேமற்கு போலீஸ் நிலையம் அருகே நடந்து சென்றார்.
  • மஞ்சுளா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம்அருகே விராட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். அவரது மனைவி மஞ்சுளா. (வயது 36). இவர் இன்று காலை தனது மகளுடன் விழுப்புரம் ேமற்கு போலீஸ் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மஞ்சுளா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உஷாரான மர்ம நபர்கள் நகையுடன்மாயமானார்கள். இதுகுறித்து மஞ்சுளா விழுப்புரம் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News