உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2022-07-04 14:41 IST   |   Update On 2022-07-04 14:41:00 IST
  • திருவண்ணாமலை பள்ளிக் கல்வித் துறைசார்பில் அறிவிப்பு
  • வருகிற 6-ந் தேதி கடைசி நாள்

திருவண்ணாமலை :

திருவண்ணாமலை பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான விண்ணப்ப தாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்று களுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிட முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும். குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தகவல் பலகையில் வெளியி டப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலகம் deotvm@gmail.com என்ற முகவரிலும், செய்யாறு மாவட்ட கல்வி அலுவலகம் cheyyardeo@gmail.com என்ற முகவரிலும், ஆரணி மாவட்ட கல்வி அலுவலகம் deoarni2018@gmail.com என்ற முகவரிலும், போளூர் மாவட்ட கல்வி அலுவலகம் deopolur@gmail.com என்ற முகவரிலும், செங்கம் மாவட்ட கல்வி அலுலகம் deochengam@gmail.com என்ற முகவரிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News