உள்ளூர் செய்திகள்
வந்தவாசியில் பைரவருக்கு சிறப்பு பூஜை
- பைரவருக்கு, தேங்காய் உருட்டி, மிளகு தீபம் ஏற்றி வழிபாடு
- பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் கால பைராஷ்டமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. பைரவர் அவதரித்த திருநாளான நேற்று பைராஷ்டமி பூஜையில் கலச ஹோமம் நடைபெற்று.
புனித நீரால் ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வட மாலை சாற்றி பஞ்சலோக ஸ்ரீ மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஸ்ரீ கால பைரவருக்கு, தேங்காய் உருட்டி, மிளகு தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இந்த சிறப்பு பூஜையில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கால பைரவரை தரிசனம் செய்து சென்றனர்.