உள்ளூர் செய்திகள்

செங்கத்தில் வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்

Published On 2023-03-04 09:54 GMT   |   Update On 2023-03-04 09:54 GMT
  • வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
  • பிப்ரவரி மாத இறுதிக்குள் வாடகை செலுத்த அறிவுறுரை

செங்கம்:

செங்கம் பேரூராட்சிக்கு சொந்தமான வணிகவரி கடைகளில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

செங்கம் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடங்களில் கடை வைத்திருப்போர் பிப்ரவரி மாத இறுதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் எனவும் வாடகை பாக்கி உள்ளவர்கள் முன்கூட்டியே வாடகை செலுத்திட அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல செங்கம் பகுதியில் வீட்டு வரி, குடிநீர் வழி உட்பட வரி இனங்கள் செலுத்தாதவர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் என பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பேரூராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் நேற்று துண்டிக்கப்பட்டது.

பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடங்களில் வாடகை செலுத்தாத 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Tags:    

Similar News