உள்ளூர் செய்திகள்

தேசூர் அருகே நடைபெற உள்ள சாலை விரிவாக்க பணிகளை சென்னை கோட்ட பொறியாளர் விசாலாட்சி, ஆய்வு செய்த போது எடுத்த படம்

ரூ.1.10 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள்

Published On 2022-08-25 10:40 GMT   |   Update On 2022-08-25 10:40 GMT
  • சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு திட்டம்
  • சென்னை கோட்ட பொறியாளர் ஆய்வு

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர், அருகே மழையூர்- தெள்ளார், சாலையில் உள்ளகுன்னகம்பூண்டி - வெடால், கூட்ரோடு பகுதியில் சாலை பாதுகாப்பு, மற்றும் விபத்து தடுப்பு, திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது.

இதை சென்னை கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு) விசாலாட்சி, வரைபடத்தை வைத்து பணிகள் நடைபெற உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் செய்யாறு கோட்டபொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ராஜகணபதி, வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், சாலை ஆய்வாளர் அஜீஸ்உல்லா, மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News