உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம்

Published On 2023-04-11 08:47 GMT   |   Update On 2023-04-11 08:47 GMT
  • வருகிற 20-ந் தேதி நடக்கிறது
  • கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் நடத்தப்படும் மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் வரும் 20-ந் தேதி முதல் ஒவ்வொரு பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் மாற்றுத்தி றனாளிகள் மாற்றுத்தி றனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய புதிய தேசிய அடையாள அட்டை வழங்க உள்ளன. இதற்கு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 4 புகைப்படத்துடனும்

மேலும் அடையாள அட்டை புதுப்பிக்க ஏற்கெனவே பெறப்பட்ட தேசிய அடையாள அட்டையுடன் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இணையதள பதிவு முகாமில் மாற்றுத்திறனாளி நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News