உள்ளூர் செய்திகள்

போளூர் குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா

Published On 2023-04-02 14:24 IST   |   Update On 2023-04-02 14:24:00 IST
  • 5-ந்தேதி நடக்கிறது
  • அன்னதானம் வழங்க ஏற்பாடு

போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் நற்குன்று குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் வரும் 5-ந்தேதி புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் மூலவர் ஸ்ரீ பாலமுருகனுக்கு உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் அபிஷேகம் அலங்காரமும் தொடர்ந்து தம்பதிகள் சங்கல்பமும் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து மதியம் 12:30 மணி அளவில் அன்னதானமும் மாலை 6.00 மணி அளவில் உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் கல்யாண கோலத்தில் சுவாமி திருவீதி உலாவும் வானவேடிக்கையுடன் நடைபெறும்.

Tags:    

Similar News