உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு 22ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Published On 2022-08-03 04:44 GMT   |   Update On 2022-08-03 04:44 GMT
  • கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

திருப்பூர் :

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் (முழு நேரம்) சேர விண்ணப்பங்கள் விநியோகம் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஜூலை 28 ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 22 ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 22 ந்தேதிக்குள் முதல்வா், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நிலையம், சாய்பாபா காலனி, கோவை என்ற அலுவலக முகவரிக்கு கூரியா் அல்லது பதிவுத்தபால் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News