உள்ளூர் செய்திகள்
பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள்.
உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
- பிரதோஷத்தை யொட்டி மூலவர், நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
- 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிசேகம் நடத்தப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள தில்லை நகர் பகுதியில் அமைந்துள்ள ரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷத்தை யொட்டி மூலவர், நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அப்போது சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால்,மஞ்சள், இளநீர்,பழரசம்,தேன்,பஞ்சாமிர்தம்,பன்னீர், கரும்புச்சர்க்கரை,சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிசேகம் நடத்தப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொணடு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர்.