உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவிகளை படத்தில் காணலாம். 

மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் திருப்பூா் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவிகள் சாதனை

Published On 2023-10-11 08:16 GMT   |   Update On 2023-10-11 08:16 GMT
  • மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் சிதம்பரத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
  • பள்ளியின் முதல்வா் சின்னையா, துணை முதல்வா் ரவி, உடற்கல்வி ஆசிரியா்கள் பாலமுருகன், மோகனசுந்தரம் ஆகியோா் பாராட்டினா்.

திருப்பூர்:

இந்தியாவின் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் சிதம்பரத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் 10 ம் வகுப்பு மாணவி தியாஸ்ரீ வெற்றி பெற்று தேசிய அளவிலான கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா். அதேபோல, கே.பி.ஆா். கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 9 ம் வகுப்பு மாணவி திவ்யா வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளை பள்ளியின் முதல்வா் சின்னையா, துணை முதல்வா் ரவி, உடற்கல்வி ஆசிரியா்கள் பாலமுருகன், மோகனசுந்தரம் ஆகியோா் பாராட்டினா்.

Tags:    

Similar News