உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம். 

தமிழகத்தில் சொத்து வரி வசூலில் காங்கயம் நகராட்சி முதலிடம்

Published On 2023-05-03 07:19 GMT   |   Update On 2023-05-03 07:19 GMT
  • தமிழகத்தில் உள்ள, 138 நகராட்சிகளில் காங்கயம் நகராட்சி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
  • 1,782 வரி விதிப்புதாரர்களிடம் இருந்து ரூ. 87 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்:

காங்கயம் நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய, 2023-24ம் ஆண்டுக்கான சொத்து வரியினை ஏப்., 30ம் தேதிக்குள் செலுத்தினால், ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்ப ட்டிருந்தது. இதனால், காங்கயத்தில் ஏப்., 30ம் தேதியன்று, சொத்து வரியில், 25 சதவீதத்தை வசூல் செய்து, தமிழகத்தில் உள்ள, 138 நகராட்சிகளில் காங்கயம் நகராட்சி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அவ்வகையில், நகராட்சிக்கு வர வேண்டிய சொத்து வரி, 16,702 வரி விதிப்புதாரர்களிடம் இருந்து, 3 கோடியே, 54 லட்சம் வசூல் செய்யப்பட வேண்டும். இதில், 1,782 வரி விதிப்புதாரர்களிடம் இருந்து ரூ. 87 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த வரி வசூல் தொகையில், 25 சதவீதம்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News