உள்ளூர் செய்திகள்
ஆட்டையாம்பாளையத்தில் தீபவிளக்கு பூஜை
- சுபிட்சமாக வாழவேண்டியும் தீப விளக்குபூஜை மற்றும் லலிதா சகஷ்ரநாம பாராயணம் ஆகியவை நடந்தது.
- 700 பெண்கள் கலந்துகொண்டனர்.
அவினாசி
உலக மக்கள் நன்மைக்காகவும், கொரோனா தாக்கத்திலிருந்து அனைவரும் விடுபட்டு சுபிட்சமாக வாழவேண்டியும் அவினாசி, ஆட்டையாம்பாளையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தீப விளக்குபூஜை மற்றும் லலிதா சகஷ்ரநாம பாராயணம் ஆகியவை நடந்தது.
இதில் ஆட்டையாம்பாளையம் ,வெள்ளியம்பாளையம், தாசம்பாளையம், நாதம்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து 700 பெண்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நிருபமாமிர்த சைதன்யா அமிர்த வித்யாலயத்தினர் செய்திருந்தனர்.