உள்ளூர் செய்திகள்

பழையகோட்டை மாட்டுச்சந்தையில் ரூ.65 ஆயிரத்துக்கு விற்பனையாக காங்கேயம் இன மயிலை வகை பசு.

காங்கேயம் பழையகோட்டை சந்தையில் ரூ.20 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

Published On 2023-03-06 07:19 GMT   |   Update On 2023-03-06 07:19 GMT
  • மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
  • 108 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.

காங்கேயம் :

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையானது திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூா்-பழையகோ ட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 108 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில், 55 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

Tags:    

Similar News