உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மாறினால் மட்டுமே ஆடை ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்படும் - ஏற்றுமதியாளர்கள் தகவல்

Published On 2023-08-21 13:10 IST   |   Update On 2023-08-21 13:10:00 IST
  • சில மாதங்களாக நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி குறைந்தது.
  • பருத்தி ஆடை களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் வர்த்தக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது

 திருப்பூர்:

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, ஆயத்த ஆடை இறக்குமதி செய்யும் நாடுகளில், பொருளாதார கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டன. இயல்புநிலை திரும்பாததால் அந்நாடு களின் ஆடை நுகர்வும் குறைந்துள்ளது. ஏற்றுமதி ஆர்டரும் குறைந்தது.சில மாதங்களாக நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி குறைந்தது. கடந்த 2022 ஜூலையில் 10 ஆயிரத்து 994 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மாதம் 9,375 கோடி ரூபாயாக குறைந்தது.

கடந்த 2022 ஏப்ரல் - ஜூலை வரையிலான 4 மாத ஏற்றுமதி 45 ஆயிரத்து 648 கோடி ரூபாயாக இருந்தது.இந்தாண்டு அதே காலத்தில் 39 ஆயிரத்து 746 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், சர்வதேச அளவில், பருத்தி ஆடை களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் வர்த்தக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு பின், அந்நாடுகளில் மக்களின் வாழ்க்கை முறையும் மாறியுள்ளது.பட்ஜெட் தயாரித்து செலவு செய்ய பழகிவிட்டனர்.விலை குறைவான ஆடைகளை பயன்படுத்துகின்றனர். ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மாறினால் மட்டுமே வர்த்தக இயல்பு நிலை திரும்பும்.அதன் பிறகே பருத்தி ஆடை ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்படும்.

முன்னதாக செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதிக்கு இந்திய நிறுவனங்கள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது என்றார். 

Tags:    

Similar News