உள்ளூர் செய்திகள்

பயன்பாட்டுக்கு வராத காத்திருப்போர் தங்கும் விடுதி.

பல்லடம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வராத காத்திருப்போர் தங்கும் விடுதி

Published On 2023-01-14 16:05 IST   |   Update On 2023-01-14 16:05:00 IST
கடந்த டிசம்பர் 30-ந்தேதி தேதி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.

பல்லடம்:

பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகளுடன் வருவோர் தங்கும் விடுதி கட்டப்பட்டது. இதனை கடந்த டிசம்பர் 30-ந்தேதி தேதி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார். இந்த நிலையில் திறந்து வைத்து பல நாட்கள் ஆன நிலையில், இன்னும் அந்த காத்திருப்போர் தங்கும் விடுதி வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-

காத்திருப்போர் தங்கும் விடுதி வளாகத்தை பராமரிப்பு பணி மேற்கொள்ள, தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு வந்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அதன் பின்னர் காத்திருப்போர் தங்கும் விடுதி செயல்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News