உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா

Published On 2023-11-05 10:50 GMT   |   Update On 2023-11-05 10:50 GMT
  • கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது.
  • 19-ந்தேதி மாலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம், பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில், கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை முதல் இரவு வரை, ஆறுகால பூஜைகள், சுவாமிக்கு அபிேஷக அலங்காரம் நடக்கிறது.

இரவு 7 மணிக்கு மேல் இந்திர விமானம், ஆட்டுகிடா, வெள்ளையானை, நீலமயில் வாகனங்களில் சுவாமிகளின் திருவீதி உலா போன்றவை நடக்கிறது. இதைத்தொடர்ந்து 18-ந்தேதி மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹார விழா நடக்கிறது. 19-ந்தேதி மாலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News