உள்ளூர் செய்திகள்

சிமெண்டு கடை உரிமையாளரை கழுத்தை அறுத்த தொழிலாளி

Published On 2022-06-22 11:08 GMT   |   Update On 2022-06-22 11:08 GMT
  • முன் விரோத தகராறில் வெறிச்செயல்

ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் பள்ளி குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் மாதனூர் ஒடுகத்தூர் சாலையில் சிமெண்டு கடை நடத்தி வருகிறார். மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( 28). தொழிலாளி. இவருக்கும் முருகனுக்கும் முன்விரோத தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கார்த்திக் சிமெண்டு கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது கார்த்திக்குக்கும் முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகன் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மாதனூர் கிராம சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News