உள்ளூர் செய்திகள்

பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2023-03-20 10:02 GMT   |   Update On 2023-03-20 10:02 GMT
  • சீட்டு கட்டி ஏமாற்றப்பட்டதாக புகார்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து வந்த சுமார் 20 மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ஓரு வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அங்குள்ள மகள் வீட்டிற்கு பெண் ஒருவர் வந்துள்ளார். அவரிடம் கடந்த பல ஆண்டுகளாக சீட்டு கட்டி ஏமாந்ததாக முற்றுகையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News