உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியர் மாயம்

Published On 2022-08-20 10:37 GMT   |   Update On 2022-08-20 10:37 GMT
  • கணவர் புகார்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த பெரியகம்பியம்பட்டு ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி சத்தியவாணி (வயது 29) இவர் ஜோலார்பேட்டை அருகே பெரியகம்பியம்பட்டு மேல் முஸ்லிம் தெரு அரசு பள்ளி சத்துணவு மையத்தில் உதவியாளராகபணிபுரிந்து வருகிறார்.

கடந்த 18-ந்தேதி காலை பள்ளிக்கு சென்றவர் பணி முடிந்து மாலை 3 மணியளவில் வீட்டுக்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் நண்பர்கள் வீடுகள் தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் ராமலிங்கம் தன்னுடைய மனைவி காணவில்லை என புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சத்துணவு உதவியாளர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News