உள்ளூர் செய்திகள்

ஓட்டல் தொழிலாளி மர்ம சாவு

Published On 2022-09-06 09:29 GMT   |   Update On 2022-09-06 09:29 GMT
  • தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே கைலாசகிரி ஊராட்சி பகுதியை சேர்ந்த யூசுப் செரீப் மகன் அமீன் செரீப் வயது (28) கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த மாதம் கைலாசகிரி வந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார் இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து அமீன் செரீப் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் வருகிறார்கள் அமீன் செரீப்க்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News