கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் திருட்டு
- இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- பின்னர் நேற்று காலை வந்து பார்த்த போது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.
பெருந்துறை:
பெருந்துறை தாலுகா கம்புளியம் பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருபவர் தங்கராஜ். இவரது அலுவலகம் சரளை பஸ் நிறுத்தம் அருகே உள்ளது. கடந்த 15 ஆண்டு களாக சிமெண்ட்டு ஓடு போட்ட அறையில் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தங்க ராஜ், அவரது உதவியாளர் ஆகியோர் மாலை அலுவல கத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். பின்னர் நேற்று காலை வந்து பார்த்த போது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது அரசால் வழங்கப்பட்ட லேப்டாப் ஒன்று, லேப்டாப் சார்ஜர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றை காணவில்லை.
மேலும் இந்த அலுவலக த்தின் அருகே இயங்கி வந்த சண்முகபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலக அறையும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு இருந்து பணம் திருட்டு போனதாக அதன் செயலாளர் செந்தில் தெரிவித்தார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் பெருந்துறை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.