உள்ளூர் செய்திகள்

வீட்டில் தூங்கிய பெண்ணின் 3 பவுன் செயின் திருட்டு

Published On 2023-04-11 09:39 GMT   |   Update On 2023-04-11 09:39 GMT
  • மேல் மாடியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளனர்.
  • அதிகாலை எழுந்த ஸ்ரீஜா தன் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் மதிப்புள்ள தாலி செயினை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஒட்டப்பட்டி ஹவுஸிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜவகர். இவரது மனைவி ஸ்ரீஜா (வயது30). நேற்று இரவு இவரது வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களை வீட்டின் கீழ் தளத்தில் தங்க வைத்துள்ளனர்.

மேல் மாடியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். அதிகாலை எழுந்த ஸ்ரீஜா தன் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் மதிப்புள்ள தாலி செயினை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News