உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

Published On 2022-08-27 19:39 IST   |   Update On 2022-08-27 19:39:00 IST
  • திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் சேகர்.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 45). விவசாயியான இவர், சில ஆண்டுகளாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24-ந் தேதி வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சேகரின் மனைவி ஜெயந்தி அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்ட சேகருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News