உள்ளூர் செய்திகள் (District)

காமராஜர் பிறந்த நாளில் முத்தியால்பேட்டையில் 4 அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் கல்வி உபகரணங்கள்- ஆர்.வீ.ரஞ்சித்குமார் வழங்கினார்

Published On 2023-07-16 11:12 GMT   |   Update On 2023-07-16 11:12 GMT
  • கலர் பென்சில், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்பட படிப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களை முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் வழங்கினார்.
  • மூத்த பத்திரிகையாளர் கவிஞர் எஸ்.முருகவேள், டி.டில்லிபாபு, சேட்டு, முருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம்:

முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து, முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் பெருந்தலைவர் காமராஜரின் 121- ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, முத்தியால்பேட்டை நடுநிலை பள்ளி, ஏரிவாய் அரசு ஆரம்ப பள்ளி, வள்ளுவப்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளி, மற்றும் களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ஆகிய 4 பள்ளிகளில் படிக்கும் 520 மாணவர்களுக்கு தேவையான தரமான நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், அரிச்சுவடி, வாய்பாடு, கலர் பென்சில், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்பட படிப்புக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி)மாவட்ட செயலாளரும், ஆன்மீக பிரமுகரும், தொழிலதிபருமான முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித் குமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.வீ.ஜோதியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார் மாவட்ட கழக அவைத் தலைவர் ரங்கநாதன், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஊராட்சிமன்ற உறுப்பினர் திருவேங்கடம், தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீமணிமாலா, ஏரிவாய் செல்வி, வள்ளுவப்பாக்கம் ஞானேஸ்வரி, களியனூர் மோகன காந்தி மற்றும் மூத்த பத்திரிகையாளர் கவிஞர் எஸ்.முருகவேள், டி.டில்லிபாபு, சேட்டு, முருகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முத்தியால்பேட்டை நடுநிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி, தேசிய கொடியை மாவட்ட கழக செயலாளரும், ஆன்மீக பிரமுகருமான முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

Tags:    

Similar News