உள்ளூர் செய்திகள்

வெங்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2023-03-14 09:00 GMT   |   Update On 2023-03-14 09:00 GMT
  • பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்த சென்று இருப்பது தெரிந்தது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

வெங்கல் அருகே உள்ள ஆயலூர் கிராமம், மேலாண்டை தெருவில் வசித்து வருபவர் செல்வகுமார். விவசாயி. இவர் கடந்த 8-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருமுல்லைவாயலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்த சென்று இருப்பதுதெரிந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News