உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரி வெயில் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதி

Published On 2023-03-18 05:12 GMT   |   Update On 2023-03-18 05:12 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • வீடுகளிலும் இரவு நேரங்களில் வெப்ப காற்று வீசி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை தொடர்கிறது. குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

வெயிலுடன் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

வீடுகளிலும் இரவு நேரங்களில் வெப்ப காற்று வீசி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இப்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது இனி மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும் என மக்கள் இப்பவே அச்சப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி 100 டிகிரி வரை வாட்டி வதைத்து வருகிறது. புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் புறநகர் பகுதியில் லேசாக மழை பெய்து வருகிறது.

எனினும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கரும்பு பால், இளநீர், தர்பூசணி பழம் ஆகியவற்றை விரும்பி பருகி வருகின்றனர்.

Tags:    

Similar News