உள்ளூர் செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் மெத்தையை கயிறு கட்டி இறக்கிய போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலி

Published On 2023-07-30 07:18 GMT   |   Update On 2023-07-30 07:18 GMT
  • எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய நாகராஜ் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
  • வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

கோயமுத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது67).

மெத்தை வியாபாரியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபழனி வேல்முருகன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வரும் மகள் பரமேஸ்வரி வீட்டிற்கு வந்தார்.

பரமேஸ்வரி வீட்டின் பக்கத்து பிளாக்கில் உள்ள வீட்டில் வசித்து வரும் நாராயணன் என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகராஜிடம் மெத்தை ஒன்று விலைக்கு வாங்கினார்.ஆனால் அந்த மெத்தை அளவு சரியாக இல்லை என்று தெரிகிறது. மேலும் அதனை சரி செய்து தரும்படி அவர் நாகராஜிடம் கூறினார்.

இதையடுத்து நாகராஜ் 3-வது மாடியின் ஜன்னல் பக்கவாட்டு சுவரில் ஏறி நின்றபடியே அருகில் 2-வது தளத்தில் உள்ள நாராயணன் வீட்டில் இருந்து மெத்தையை கயிறு கட்டி இறக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய நாகராஜ் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News