உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம்-செய்யூர் பகுதியில் 22 ஆயிரம் பறவைகள்: வனத்துறை அதிகாரிகள் தகவல்

Published On 2023-01-30 07:09 GMT   |   Update On 2023-01-30 07:09 GMT
  • தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
  • கடல் சார்ந்த பகுதிகளான ஓதியூர் மற்றும் முதலியார் குப்பம், கழிவெளி பகுதியில் வாழக் கூடிய பறவைகளை கணக்கெடுத்தனர்.

மதுராந்தகம்:

தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நீர் பறவைகள், நிலப்பறைவைகள் என்று 2 கட்டமாக நடைபெற்றது. இதில் வன அதிகாரிகள், பறவை ஆர்வலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில் எடுத்த கணக்கெடுப்பில் நீர், நிலத்தில் வசிக்கும் பறவைகள் மொத்தம் 22 ஆயிரத்து 800 உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வேடந்தாங்கல் ஏரி, கரிக்கிலி ஏரி, மதுராந்தகம் ஏரி, அண்டவாக்கம் ஏரி, உள்ளிட்ட பல்வேறு நீர்நிலை பகுதிகளில் வசிக்கக் கூடிய பறவைகளின் எண்ணிக்கையை வேடந்தாங்கல் வனசரக அலுவலர் லெஸ்லி தலைமையிலான வனத்துறை குழுவினர் பைனா குலர், தொலை நோக்கி கருவிகளை கொண்டு பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 49 வகையான 9050 பறவைகள் இருந்தது.

மதுராந்தகம் வனக்கோட்டத்தின் சார்பில் வனகோட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறை குழுவினர் செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட கடலும், கடல் சார்ந்த பகுதிகளான ஓதியூர் மற்றும் முதலியார் குப்பம், கழிவெளி பகுதியில் வாழக் கூடிய பறவைகளை கணக்கெடுத்தனர். இதில் 40 வகையான 13 ஆயிரத்து 750 பறவைகள் இருப்பது தெரியவந்தது.

Tags:    

Similar News