உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்திறன் போட்டிகள்
- மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
- ஓவியம், வர்ணம் தீட்டுதல், களிமண் உருவம் செய்தல், கட்டுரை, மொழித்திறன், திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டது.
குமாரபாளையம்:
மாணவர்களின் கலைத்தி றன்களை வெளிக்கொ ணரும் விதமாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இதன்படி குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான தனிதிறன் வெளிக்கொணர ஓவியம், வர்ணம் தீட்டுதல், களிமண் உருவம் செய்தல், கட்டுரை, மொழித்திறன், திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளி அளவிலான போட்டியிலும், வட்டார அளவிலான போட்டியிலும் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுவதுடன் கல்வி சுற்றுலா செல்லவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.