உள்ளூர் செய்திகள்

வண்டலூர் அருகே குற்றச்செயல்களை தடுக்க 100 இடங்களில் கண்காணிப்பு கேமரா

Published On 2022-11-25 11:59 IST   |   Update On 2022-11-25 11:59:00 IST
  • அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை உள்ளிட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.
  • ஆயுதப்படை பயிற்சி மையத்திற்காக ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் இடத்தில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகிறது.

வண்டலூர்:

வண்டலூரை அடுத்த வேடமங்கலத்தில் புறகாவல் நிலையம் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கண்டிகை சாலை, அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை உள்ளிட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.

இதில் ஊராட்சி தலைவர் கல்யாணிரவி, திருப்போரூர் ஒன்றிய குழு தி.மு.க. தலைவர் இதயவர்மன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் சம்பத்குமார், மாவட்ட கவுன்சிலர் கஜேந்திரன், போலீஸ் துணை கமிஷனர் ஜோஷ்தங்கையா, உதவி கமிஷனர் ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நெடுங்குன்றம் வனிதா ஸ்ரீசீனிவாசன், நல்லம்பாக்கம் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி, கீரப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரவி போலீஸ் கமிஷனரிடம் அளித்த கோரிக்கை மனுவில், புதிய புறக்காவல் நிலையத்தில் நிரந்தரமாக சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 2 போலீசாரை பணியமர்த்த வேண்டும், ஆயுதப்படை பயிற்சி மையத்திற்காக ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் இடத்தில் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகிறது. எனவே அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

Tags:    

Similar News