உள்ளூர் செய்திகள்

ஆந்திராவுக்கு கடத்த முயற்சி- கும்மிடிப்பூண்டி ரெயிலில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

Published On 2022-12-25 10:06 GMT   |   Update On 2022-12-25 10:06 GMT
  • ரெயில்களில் கேட்பாரற்று இருந்த 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் மொத்தம் 3,500 கிலோ ரேசன் அரிசி இருந்தது.
  • ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து திருவள்ளூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேசன் அரிசி ரெயில் மூலம் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குநர் அபாஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவுப்படி, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில், குற்றப் புலனாய்வுத் துறை, குடிமை துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் கும்மிடிப்பூண்டி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தீப் ஆகியோர் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அவர்கள் 3-வது நடைமேடையில் வந்து செல்லும் ஆந்திர மாநிலம், சூளுர் பேட்டை ரெயில்களில் சோதனை செய்தனர்.

அப்போது ரெயில்களில் கேட்பாரற்று இருந்த 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் மொத்தம் 3,500 கிலோ ரேசன் அரிசி இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து திருவள்ளூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News