உள்ளூர் செய்திகள்

மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை

Published On 2023-10-28 08:54 GMT   |   Update On 2023-10-28 08:54 GMT
  • மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
  • முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காளையார்கோவில்

மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜையை முன்னிட்டு காளையார் கோவிலில் உள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன், கொள்கை பரப்பு செய லாளர் மருது அழகுராஜ், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன், கே வி. சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் யோக.கிருஷ்ண குமார் வே.ஆரோக்கியசாமி, சிவகங்கை நகர்கழக செயலாளர் துரைஆனந்த் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ். மாங்குடி எம்.எல்.ஏ. மாவட்ட காங்கிரஸ் தலை வர் சஞ்சய் காந்தி, பொதுக் குழு உறுப்பினர் ஜெய சிம்மன், கணேசன், சன்னாசி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல். ஏ. ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி மற்றும் கட்சியினர் மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

இதேபோல் ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சார்லஸ் , பா.ஜ.க. மேப்பல் சக்தி, மாவட்டத்தலைவர் பில்லப்பன், வழக்கறிஞர் சொக்கலிங்கம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News