உள்ளூர் செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

483 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

Published On 2023-08-24 08:22 GMT   |   Update On 2023-08-24 08:22 GMT
  • 483 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
  • பெற்றோர்-ஆசிரிய கழக தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நாகப்பா மருதப்பா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டையிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது.

3 பள்ளிகளில் மொத்தம் 483 மாணவ- மாணவிளுக்கு ரூ.23.09 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிளை அமைச்சர் பெரியகருப்பன், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், துணை சேர்மன் கான்முகமது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிர மணியன் (திருக்கோஷ்டி யூர்), சுசிலா (கோட்டை யிருப்பு), மாவட்ட விளை யாட்டு அணி நாராயணன், மாவட்ட மாணவரணி ராஜ்குமார், ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகளான சகாதேவன், பஷீர்அகமது,சீமான் சுப்பு, கண்ணன், ஹரிகிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் பள்ளி தலைமையாசி ரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்-ஆசிரிய கழக தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News