உள்ளூர் செய்திகள்

நெற்குப்பையில் ஆனிமாத சப்பர திருவிழா

Published On 2023-07-09 07:31 GMT   |   Update On 2023-07-09 07:31 GMT
  • நெற்குப்பையில் ஆனிமாத சப்பர திருவிழா நடந்தது.
  • மாற்று சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வழி நெடுகிலும் மெழுகுவத்திகளை ஏந்தியவாறு வழிபட்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை பேரூராட்சியில் அமைந்துள்ள திருமுழுக்கு யோவானின் பெருவிழா என்னும் சப்பரத் திருவிழா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவ பெருமக்களால் ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதேபோல் இந்த ஆண்டும் இத்தேவ ஆலயத்துக்கு பாத்தியப்பட்ட சிங்கம்புணரி பங்குத்தந்தை ஜெயசீலன் உள்ளிட்ட மூன்று பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து வண்ண, வண்ண விளக்குகளில் இயேசு கிறிஸ்து, மேரி, குழந்தை மேரி உள்ளிட்ட சிலைகளுடன் நகரின் முக்கிய விதிகளில் வலம் வந்தது. மாற்று சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வழி நெடுகிலும் மெழுகுவத்திகளை ஏந்தியவாறு வழிபட்டனர்.

Tags:    

Similar News