சாலைகளில் சிம்கார்டுகளை விற்பதை தடுக்க வலியுறுத்தல்
- திண்டுக்கல் மாவட்ட மொபைல் போன் ரீடெய்லர் அசோசியேசன் சார்பில் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
- சாலை ஓரங்களில் சிம்கார்டுகளை விற்பதை தடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட மொபைல் போன் ரீடெய்லர் அசோசியேசன் சார்பில் மாவட்ட எஸ்.பி.யிடம் தலைவர் சேக்பரீத், செயலாளர் சேக்பரீத் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
அவர்கள் தெரிவிக்கை யில் நாளுக்குநாள் அதி கரித்து வரும் செல்போன் உபயோகத்தில் சிம்கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த கார்டுகளை நிறுவனங்களில் திண்டுக்கல் மாவட்ட டிஸ்டிரிபியூடர்கள் விற்பனையை மட்டுமே நோக்கமாக கருதி முறை யின்றி சாலையோரங்களில் இலவசமாகவும், குறைந்த விலையிலும் குடைபோட்டு விற்பனை செய்து வரு கின்றனர்.
இதை பொதுமக்கள் வாங்கி 1 மாதம் மட்டுமே உபயோகித்து விட்டு பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறிகின்றனர். இதனை ஒருசிலர் எடுத்து தவறான செயலுக்கு பயன்படுத்துவதால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேறு மாநில நபர்கள் குறிப்பாக வடமாநிலத்தவர் எந்தவித ஆவணங்களையும் காட்டாமல் சிம்கார்டுகளை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே இதுபோன்ற விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றனர்.