உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி மாயம்

Published On 2022-10-29 14:55 IST   |   Update On 2022-10-29 14:55:00 IST
  • தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
  • நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி கிராமம், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் 17 வயது மகள் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைகாததால் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News