உள்ளூர் செய்திகள்

சூளகிரியில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-03-31 09:39 GMT   |   Update On 2023-03-31 09:39 GMT
  • குண்டு குறுக்கியில் அமைந்த தனியார் கார் நிறுவனம் சார்பில் சுமார் 200 மரக்கன்றுகளை நட்டனர்.
  • தனியார் நிறுவன மேலாளர் குமார், பிரபாகரன், சதீஷ் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி கோனேரிப் பள்ளி ஊராட்சி பகுதியில் குண்டுகுறுக்கி கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமத்திற்கு அருகேயுள்ள அரசு நிலத்தில் கோனேரிப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோபம்மா சக்கரப்பா தலைமையில் சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் மற்றும் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார், குண்டு குறுக்கியில் அமைந்த தனியார் கார் நிறுவனம் சார்பில் சுமார் 200 மரக்கன்றுகளை நட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தனியார் நிறுவன மேலாளர் குமார், பிரபாகரன், சதீஷ் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News