உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம்: ரங்கப்பனூரில் தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணி
- ரங்கப்பனூரில் தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- ஊராட்சி சமூக ஆர்வலர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் ஊராட்சியில் தூய்மை இயக்கம் மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் சார்பாக விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனாகாமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், ஊராட்சி செயலர் திருமால்வளவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி சமூக ஆர்வலர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.