உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தபால் அலுவலகங்களில் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை தொடக்கம்

Published On 2022-12-20 06:00 GMT   |   Update On 2022-12-20 06:00 GMT
  • தபால் அலுவலகங்களில் தங்க சேமிப்பு பத்திரம் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் டிசம்பர் 23 முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வாரிசு நியமனத்துக்கு வாரிசு தாரரின் வங்கிகணக்கு எண் அடையாள ஆவணங்களையும் வழங்க வேண்டும்.

திண்டுக்கல்:

தபால் அலுவலகங்களில் தங்க சேமிப்பு பத்திரம் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் டிசம்பர் 23 முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திண்டுக்கல் கோட்ட தபால் அலுவலகங்களின் முதுநிலை கண்காணி ப்பாளர் நாகாநாயக் தெரிவித்துள்ளதாவது:-

இந்திய தபால்துறை சார்பில் தங்க சேமிப்பு பத்திரம் குறிப்பிட்ட இடைவெளியில் மாதந்தோறும் அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி டிச.23-ந் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஒரு கிராம் தங்க சேமிப்பு பத்திரம் ரூ.5409க்கு விற்பனை செய்யப்படும். இதற்கு வட்டி 2.5% வழங்கப்படும். ஒரு கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரை முதலீடு செய்யலாம். முதிர்வு காலம் 8 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பின்னும் முன் முதிர்வு செய்யலாம். தங்க சேமிப்பு பத்திரம் திட்டத்தில் சேர விரும்புவோருக்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவை மட்டுமே அடையாள சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் வங்கி கணக்கு புத்தகம் ஐ.எப்.எஸ்.சி. கோர்டு எண் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். வாரிசு நியமனத்துக்கு வாரிசு தாரரின் வங்கிகணக்கு எண் அடையாள ஆவணங்களையும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News