உள்ளூர் செய்திகள்
கடையம் அருகே வள்ளியம்மாள்புரத்தில் ரூ.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை-மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- வள்ளியம்மாள் புரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கினார்.
- விழாவில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார்.
கடையம்:
கடையம் யூனியன் மடத்தூர் ஊராட்சி க்கு உட்பட்ட வள்ளியம்மாள் புரத்தில் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கினார். அதன் திறப்பு விழா நடைபெற்றது. மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார்.
இதில் மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் கணபதி, மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாநில போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மதுரை, ஐந்தாம் கட்டளை பஞ்சா யத்து தலைவர் முப்புடாதி பெரியசாமி, பொ ட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், மடத்தூர் பஞ்சா யத்து துணை தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.