உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட சுருளிவேல்.

கம்பத்தில் பயங்கரம் உருட்டு கட்டையால் தாக்கி சாலையோர வியாபாரி படுகொலை போதை வாலிபர்கள் வெறிச்செயல்

Published On 2022-10-17 10:51 IST   |   Update On 2022-10-17 10:51:00 IST
  • குடிபோதையில் வந்த சில வாலிபர்கள் அவரிடம் பொருட்கள் கேட்டு தகராறு செய்தனர்
  • படுகாயம் அடைந்த சுருளிவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் 6வது வார்டு பாரதியார் நகரை சேர்ந்தவர் சுருளிவேல் (வயது52). இவர் தள்ளுவண்டியில் ரொட்டி, பன் உள்ளிட்ட திண்பண்டங்களை வைத்து விற்பனை செய்து வந்தார்.

நேற்று இரவு கம்பம் மெட்டு காலனியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த சில வாலிபர்கள் அவரிடம் பொருட்கள் கேட்டு தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுருளிவேலை அந்த வாலிபர்கள் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

படுகாயம் அடைந்த சுருளிவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அந்த சமயத்தில் அங்கு சாரல் மழை பெய்து கொண்டிருந்ததாலும் மின் வினியோகம் தடைபட்டதாலும் இச்சம்பவம் குறித்து தாமதமாக தகவல் வெளிவந்தது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் சுருளிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா உதவியுடன் சந்தேகத்தின் பேரில் 5 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுருளிவேலுக்கு சுந்தரி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மகன் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் போதை வாலிபர்களால் சுருளிவேல் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News