உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு

Published On 2023-06-16 15:06 IST   |   Update On 2023-06-16 15:06:00 IST
  • இனிப்புகள் வழங்கினர்
  • ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

தமிழ்நாடு முழுவதிலும் கோடை விடுமுறை முடிவடைந்து ஆரம்ப பள்ளிகள் திறக்கப்பட்டன. ராணிப்பேட்டை அடுத்த மலைமேடு பகுதியில் உள்ள நடேசனார் அரசு நிதி உதவி ஆரம்ப பள்ளியில் நேற்று முன்தினம் பள்ளி திறப்பு நாளை முன்னிட்டு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வாலாஜா மேற்கு வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், துணை தலைவர் சபரிகிரீசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர்.

இதில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பொற்கொடி உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News