உள்ளூர் செய்திகள்

கலெக்டர் வளர்மதி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

Published On 2023-03-02 09:58 GMT   |   Update On 2023-03-02 10:02 GMT
  • முதல்-அமைச்சரின் சீரிய திட்டம்
  • கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட் டத்தில் ஊட்டச்சத்து குறை பாடுள்ள, பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரையிலான 2,583 குழந்தைகள் மற்றும் 56 நாட்கள் ஊட்டச்சத்து உண வுகளை சாப்பிட பாலூட்டும் தாய்மார்களுக்கும் தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்து பெட்ட கம் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, ஊட்டச்சத்து பெட்ட கத்தை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ரா ணிப்பேட்டை மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 6 வயது வரை 64 ஆயி ரத்து 599 குழந்தைகள் ஊட் டச்சத்து குறைபாடு உள்ள வர்களாக கணக்கெடுக்கப் பட்டுள்ளனர். இவர்களில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் 2,583 பேர் என கண்டறியப் பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிட தமிழ்நாடு முதல்- அமைச்சரின் சீரிய திட்டமான ஊட்டச் சத் தினை உறுதி செய் திட்டத் தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் உணவுகள் வழங்கப்படுகிறது.

இந்த உணவுகள் ஊட்டச் சத்து குறைபாடு கண்டறியப் பட்ட குழந்தைகளுக்கு 56 நாட்கள் தொடர்ந்து கிடைக் கும் வகையில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங் கப்பட்டு, குழைந்தைகளின் எடை, உயரம் அளவீடு செய்து ஊட்டச்சத்து உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளது.

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைக ளின் தாய்மா ர்களுக்கு ஊட் டச்சத்து பெட்டகம் தலா இரண்டு வழங்க ப்படுகிறது. மிதமான ஊட்டச்சத்து குறை பாடுள்ள 1,081 குழந்தைகளுக்கும், அவர்க ளின் தாய்மார்க ளுக்கும் தலா ஒரு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப்படு கிறது. இந்த பெட்டகத்தில் ஊட்டச்சத்து பவுடர், பேரிச் சம்பழம், நெய், வைட்டமின் டானிக், குடற்புழு நீக்க மாத் திரை, டவல், டம்ளர் ஆகிய வைகள் உள்ளது.

அதே போன்று 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,960 குழந்தைகளின் ஊட்டச் சத்திற்காக உணவு வழங்கப்ப டுகிறது. ஆகவே தாய்மார்கள் ஊட்டச்சத்து உணவுகளை தவறாமல் சாப்பிடவும், குழந் தைகளுக்கு ஊட்டச்சத்து உணவை தொடர்ந்து வழங்கி குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அரசுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கிட வேண் டும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அம்சப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News