உள்ளூர் செய்திகள்
கிணற்றில் வெல்டிங் தொழிலாளி பிணம்
- கொலை செய்யப்பட்டாரா? விசாரணை
- வாலாஜா ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் கிராமத்தை சேர்ந்த வர் டில்லிபாபு (வயது 32). வெல்டிங் தொழிலாளி. கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று டில்லிபாபு பிணமாக கிடந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக் குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து டில்லிபாபு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதாவது இருக்குமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.