- ராஜாஜியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கினர்.
ஓசூர்,
மூதறிஞர் ராஜாஜியின் 144 -வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் அவரது இல்லத்தில் உள்ள உருவச்சிலைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ சத்யா, ஒசூர் உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் ராஜாஜியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கினர்.
அதேபோல், ராஜாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சீடரும்,'முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் தற்போது தி.மு.க வின் மூத்த பிரமுகருமான பி.வெங்கடசாமி, தனது 87 வயதிலும், தள்ளாடிய நிலையில் கையில் ஊன்றுகோலுடன் ராஜாஜியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
மேலும் விழாவில், துணை மேயர் ஆனந்தய்யா,மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் மோகன், ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி,, தொரப்பள்ளி ஊராட்சி தலைவர் சாந்தம்மா, ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.