உள்ளூர் செய்திகள்
100 நாள் வேலை பார்த்த பெண்களை கடித்த கதண்டு வண்டு
வேலை பார்த்த பெண்களை கடித்த கதண்டு வண்டு9 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியைச் சேர்ந்த புதுப்பட்டி ஊராட்சி போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அணிக்கனி பகுதியில் 100 நாள் வேலை பார்த்து வந்தனர்.
அப்போது அங்கே இருந்த மரங்களிலிருந்து கதண்டு வண்டு கிளம்பி அங்கே வேலை பார்த்த பெண்களை கொத்தியுள்ளது. இதனால் பெண்கள் அலறியடித்துக் கொண்டு தப்பித்து ஓடியுள்ளனர். இதில் கதண்டு கொட்டிய இந்திரா,சகுந்தலா, மீனா,உமா,ராணி, உள்ளிட்ட 9 பெண்களை அருகே இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.