உள்ளூர் செய்திகள்

நீர் பாசன சங்க தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

Published On 2022-11-19 09:31 GMT   |   Update On 2022-11-19 09:31 GMT
  • நீர் பாசன சங்க தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
  • மாலை முடிவுகள் அறிவிக்கப்படும்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 58 பாசன குளங்கள் உள்ளது. இதனை நிர்வாக வசதிக்காக 16 பாசன சங்கங்களாக வைத்துள்ளனர். இந்த நீர்பாசன சங்கத்திற்கு அரசு தேர்தலை அறிவித்தது அதன்படி 15 பாசன சங்கங்களுக்கு போட்டியின்றி தலைவர் மற்றும் மண்டலக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் விவசாயிகள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 4 மணியளவில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.

Tags:    

Similar News