உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 18 ஏரிகளில் மீன் வளர்த்திட பொது ஏலம்

Published On 2022-12-04 08:57 GMT   |   Update On 2022-12-04 08:57 GMT
  • கடலூர் மாவட்டத்தில் 18 ஏரிகளில் மீன் வளர்த்திட பொது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரவேற்கப்படுகின்றது.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள தீவிர உள்நாட்டு மீன்வளர்ப்பு மற்றும் விற்பனைத்திட்டத்தின் கீழ் 18 ஏரிகள் மூன்றாண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் வருகிற 14 ந்தேதி மாலை 5 மணி வரை பரங்கிப்பேட்டை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரவேற்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து பொது ஏலம் மூலம் 15 ந்தேதி காலை 11 மணியளவில் குத்தகைக்கு விடப்பட உள்ளது. மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள நபர்கள் மீன்பாசி குத்தகை நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பங்களை உரிய கட்டணம் செலுத்தி பரங்கிப்பேட்டை இயங்கிவரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

Tags:    

Similar News